Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனியை பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக்கி இருப்பேன்… பாகிஸ்தான் வீரர் புகழ்ச்சி!

தோனியை பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக்கி இருப்பேன்… பாகிஸ்தான் வீரர் புகழ்ச்சி!
, வியாழன், 10 ஜூன் 2021 (17:57 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பாகிஸ்தான் வீரர் யாசிர் அராபத் புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி டி 20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை வாங்கிக் கொடுத்த பெருமைக்குரியவர். அதுமட்டுமில்லாமல் அவரின் தலைமையில் இந்திய அணி மிகப்பெரிய சாதனைகளை எல்லாம் செய்தது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் யாசிர் அராபத் ‘தோனி மட்டும் ஓய்வு பெறவில்லை என்றால் அவரை பாகிஸ்தான் அணிக்குக் கேப்டனாக்கி இருப்பேன்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் ‘தோனி மிகச்சிறந்த கேப்டன். அவர் வீரர்களின் தனித்திறமைகளை கண்டுபிடித்து ஊக்கப்படுத்துவார். பாகிஸ்தான் அணியில் மிகச்சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தோனி போல் மேன் மேனேஜ்மெண்ட் தெரிந்த ஒரு கேப்டன் வேண்டும். 90களில் தோனிக்கு முன்பாக மைக்கேல் பெவன் பினிஷராக இருந்தார். ஆனால் இப்போது தோனியின் அருகே கூட எந்த வீரராலும் வர முடியாது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு கேப்டன்சி கிடைக்கும் என நினைத்தேன்… மனம் திறந்த யுவ்ராஜ்!