Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கு கேப்டன்சி கிடைக்கும் என நினைத்தேன்… மனம் திறந்த யுவ்ராஜ்!

Advertiesment
எனக்கு கேப்டன்சி கிடைக்கும் என நினைத்தேன்… மனம் திறந்த யுவ்ராஜ்!
, வியாழன், 10 ஜூன் 2021 (15:38 IST)
2007 உலகக்கோப்பை தொடரில் எனக்குதான் கேப்டன் பதவி கிடைக்கும் என நினைத்திருந்ததாக யுவ்ராஜ் சிங் கூறியுள்ளார்.

இந்திய அணி கண்ட மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணிக்காக 2 உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை இழந்தது மிக மோசமான காலகட்டம். அதற்கடுத்து நான்கு மாதங்கள் நாங்கள் இந்தியாவில் இல்லாமல் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். அப்போது எல்லா மூத்த வீரர்களும் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினார்கள்.

அதனால் டி 20 உலகக்கோப்பை தொடருக்கு நான்தான் கேப்டனாக அறிவிக்கப்படுவேன் என நினைத்தேன். ஆனால் தோனி அறிவிக்கப்பட்டார். கேப்டன் யாராக இருந்தாலும் நாம் 100 சதவீத ஆதரவை தந்து அணியின் வெற்றிக்காக உழைப்போம்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அல்பி மோர்கலுக்கு பிறந்த நாள்; சிஎஸ்கே வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து!