Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள் எவை எவை?

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (08:46 IST)
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது காலிறுதிப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன
 
ஏற்கனவே உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி போட்டியில் குரோஷியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு அணிகள் வெற்றி பெற்றன என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மொரோக்கோ மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று நடைபெற்ற மற்றும் போர்ச்சுகல் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான போட்டியில் மொரோக்கோ வெற்றி பெற்றது. அதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அரையிறுதியில் அர்ஜென்டினா மற்றும் குரோசியா ஆகிய அணிகளும் பிரான்ஸ்-மொரோக்கோ  ஆகிய அணிகளும் மோத உள்ளன என்பதும் டிசம்பர் 18ஆம் தேதி உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயம் செய்யும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments