Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரன் எடுப்பதை தவிர மற்ற எல்லாமே செய்தார்: மேக்ஸ்வெல் மீது சேவாக் குற்றச்சாட்டு

ரன் எடுப்பதை தவிர மற்ற எல்லாமே செய்தார்: மேக்ஸ்வெல் மீது சேவாக் குற்றச்சாட்டு
, புதன், 9 டிசம்பர் 2020 (17:46 IST)
நடைபெற்ற முடிந்த ஐபிஎல் போட்டிகளில் தங்கள் திறமையை நிரூபித்து இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என அனைத்து இந்திய விளையாட்டு வீரர்களும் தீவிர முயற்சியில் இந்த நிலையில் ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் ஒருசிலர் ஏனோ தானோ என்று விளையாடினர் 
 
தங்கள் சொந்த நாட்டிற்கு விளையாடும்போது அதிரடியாக விளையாடும் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடும் போது கவனம் இல்லாமல் விளையாடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
குறிப்பாக பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த மேக்ஸ்வெல் ஒரு போட்டியில் கூட சரியாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சுட்டிக் காட்டிய முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீரேந்திர சேவாக் ’ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் எந்த அழுத்தத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை என்றும், ஜாலிக்காக மட்டுமே இருந்தார் என்றும், ரன் எடுப்பது தவிர மற்ற எல்லாம் செய்தார் என்றும், குற்றம் சாட்டி உள்ளார் 
 
ஐபிஎல் போட்டிகளில் தனது அணிக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இருந்த மேக்ஸ்வெல் தற்போது இந்தியாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு – இந்திய வீரர் அறிவிப்பு!