Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு… விருதுகளை திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்கள்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு… விருதுகளை திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்கள்
, வெள்ளி, 4 டிசம்பர் 2020 (22:10 IST)
டெல்லியில் போராடும், எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கிய விருதுகளை மத்திய அரசுக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் இன்று 9வது நாளாகப் போராடி வருகின்றனர்.

நேற்று 4 வது கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகளை  மத்திய அரசு அழைத்தது.  ஆனால் அப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், நாடு முழுவதும் முழு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப்போரட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துவரும் நிலையில்ப் நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் விடுக்கப்பட்டுள்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தனக்கு மத்திய அரவு அளித்த பத்ம விபூஷன் விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

மேலும் பாஜகவுடனான கூட்டணியை முதல்வரின் கட்சியான சிரோமணி அகாலிதளம்  முறித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,டெல்லியில் போராடும், எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கிய விருதுகளை மத்திய அரசுக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

இதில், சாகித்ய அகடாமி விருதுகளை வென்ற டாக்டர் மோகன் ஜித், டாக்டர் ஜஸ்விந்த்ரர் சிங், ஸ்வராஜ் பிர் ஆகிய எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை திரும்பக் கொடுத்துள்ளனர்.

மேலும் விவசாயிகளின் கோரிக்களை நிறைவேற்றாமல் மத்திய அரசு அவர்களை கடும் குளிரில் விட்டுள்ளதை எதிர்த்து பஞ்சாப் எழுத்தாளர்கள் என்று நினைவுகூறப்படுமென பஞ்சாப் எழுத்தாளர்கல் சங்கம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி கட்சிக்கு தாவிய ’’பாஜக முக்கிய நிர்வாகி’’...புதிய நிர்வாகி நியமனம் !