Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விருதுகள் தேர்வுக்குழுவில் வீரேந்திர சேவாக் !

விருதுகள் தேர்வுக்குழுவில் வீரேந்திர சேவாக் !
, சனி, 1 ஆகஸ்ட் 2020 (11:44 IST)
ஆண்டுதோறும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் தேர்வுக்குழுவில் வீரேந்திர சேவாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான வீரேந்திர சேவாக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் பல வெளிநாட்டு தொடர்களிலும் விளையாடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் வரண்னையாளராகவும் செயல்படுகிறார். இந்நிலையில் அவர் ஆண்டுதோறும் இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான தேர்வுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் 12 பேர் கொண்ட குழுவில் சேவாக் உள்ளிட்ட பல விளையாட்டு துறை வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகை அசர வைத்த அதிவேகத்தில் பறக்கும் சூப்பர் கார்…