Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற விராத் கோஹ்லி எடுத்த அதிரடி முடிவு:

Advertiesment
இந்தியா
, சனி, 8 பிப்ரவரி 2020 (07:41 IST)
டாஸ் வென்ற விராத் கோஹ்லி
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்று விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் முடிந்த டி20 கிரிக்கெட் போட்டியில் 5-0 என்ற கணக்கில் முழு வெற்றியை இந்திய அணி பெற்றது. ஆனால் அதே நேரத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் முதலாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது 
 
இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்தார். விராத் கோஹ்லியின் அதிரடி முடிவை அடுத்து தற்போது நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை அந்த அணி 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பும்ரா முதல் ஓவரை மெய்டன் ஓவராக வீசியுள்ளார்.
 
இன்றைய போட்டியில் இரு அணிகளும் விளையாடும் வீரர்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு
 
1 பிபி ஷா 2 மயாங்க் அகர்வால் 3 விராத் கோஹ்லி, 4 ஸ்ரேயாஸ் அய்யர், 5 கே.எல்.ராகுல், 6 ஜாத 7 ஜடேஜா, 8 ஷர்துல் தாக்கூர் 9 சயினி 10 பும்ரா 11 சாஹல்
 
நியூசிலாந்து: 1 நிக்கோலஸ், 2 குப்தில், 3 சேப்மான், 4 ப்ளண்டல் 5 லாதம்  6 டெய்லர் 7 நீஷம் 8 கிராந்தோம் 9 செளதி 10 ஜேமிசன் 11 பென்னட்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறந்த பேட்ஸ்மேன் கோலியா? ஸ்மித்தா? என்ன சொல்கிறார் சச்சின்?