Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டி தொடங்கியதும் முதல் விக்கெட்டை காலி செய்த உமேஷ் யாதவ்!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (15:52 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான ஓவல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

நேற்றைய போட்டியின் போது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் ஷர்துல் தாகூர் ஐம்பத்தி ஏழு ரன்களும், விராத் கோலி 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி 191 ரன்களில் ஆட்டம் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது அந்த அணி 5 ரன்களில் ஒரு விக்கெட்டும் ஆறு ரன்களில் ஒரு விக்கெட்டும் 52வது ரன்களில் ஒரு விக்கெட்டையும் என மூன்று விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய கேப்டன் ஜோ ரூட் 21 ரன்களில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் 53 ரன்களுக்கு 3 விக்கெட்களோடு நேற்றைய ஆட்டம் முடிந்தது. இந்நிலையில் இப்போது இரண்டாம் நாள் போட்டி தொடங்கிய உடனேயே க்ரைக் ஓவர்டோன் விக்கெட்டை உமேஷ் யாதவ் எடுத்துள்ளார். தற்போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments