Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு வெண்கலம்! – மாஸ் காட்டும் இந்தியா!

துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு வெண்கலம்! – மாஸ் காட்டும் இந்தியா!
, வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:06 IST)
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா மற்றுமொரு வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது.

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற 50மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் அவனி லெகாரா 445.9 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். அவனி லெகாரா முன்னதாக துப்பாக்கி சுடுதலின் மற்றுமொரு பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.

இதுவரை இந்தியா மொத்தம் 2 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 12 விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஸ்வினை எடுக்காதது பைத்தியக்காரத்தனம்… கடுமையாக சாடிய இங்கிலாந்து கேப்டன்!