Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனக்கு இது தான் வேலையா? சீன்டியவர்களுக்கு சேவக் பதிலடி!!

எனக்கு இது தான் வேலையா? சீன்டியவர்களுக்கு சேவக் பதிலடி!!
, புதன், 1 மார்ச் 2017 (11:50 IST)
குர்மேகர் கார் விஷயத்தில் எந்த உள்நோக்கத்துடனும் டுவிட்டரில் பதிவு செய்யவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவக் தெரிவித்துள்ளார்.


 
 
காஷ்மீரில் நடந்த போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் மந்தீப் சிங்கின் மகளான குர்மேகர் கார், தனது பேஸ்புக் பக்கத்தில், எனது தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை, போர் தான் கொன்றது, என வெளியிட்டிருந்தார்.
 
அதனால் ஏ.பி.வி.பி. அமைப்பினர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதாக கருதி அவரை கற்பழித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த சம்பவம் சேவக்கின் கண்ணில் பட்டது, அதனால் அவரை கலாய்க்கும் விதமாக, நான் இரண்டு முச்சதம் அடிக்கவில்லை, எனது பேட் தான் அடித்தது, என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
 
இதையடுத்து பலர் சேவக்கின் பதிவில் உள்நோக்கம் உள்ளதாக கூறினர். இது தொடர்பாக சேவக் கூறுகையில், குர்மேக்கரின் கருத்துக்கும் எனது டுவிட்டர் பதிவிற்கும் எந்த உள்நோக்கமும் இல்லை. இது வெறும் காமெடி மட்டுதான் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இ.எஸ்.பி.என். கிரிக் இன்போ: இந்த ஆண்டின் சிறந்த வீரர்கள் யார் தெரியுமா?