Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 3வது ஒருநாள் போட்டி: இலங்கையை வாஷ்-அவுட் செய்யுமா இந்திய அணி?

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (07:37 IST)
இன்று 3வது ஒருநாள் போட்டி: இலங்கையை வாஷ்-அவுட் செய்யுமா இந்திய அணி?
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இலங்கை அணி வாஷ் அவுட் ஆகும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக இலங்கை வீரர்கள் முனைப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியை வாட்ஸ்அவுட் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments