Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லி-மும்பை இன்று பலப்பரிட்சை: வெற்றி பெறும் அணி நேரடியாக ஃபைனல்!

Advertiesment
ஐபிஎல்
, வியாழன், 5 நவம்பர் 2020 (09:19 IST)
டெல்லி-மும்பை இன்று பலப்பரிட்சை:
ஐபிஎல் தொடரில் கடந்த சில நாட்களாக லீக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. இதனை அடுத்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது 
 
இன்றைய முதல் பிளே ஆப் போட்டியாக டெல்லி மற்றும் மும்பை அணிகள் குவாலிபயர் ஒன்று என்ற போட்டியில் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பதும் தோல்வி பெறும் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
நேற்று முன்தினம் நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பையின் முக்கிய பந்துவீச்சாளர்கள் டிரண்ட் போல்ட் மற்றும் பும்ரா ஆகிய இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அந்த அணி ஐதராபாத் அணியின் ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் பும்ரா மற்றும் டிரென்ட் போல்ட் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணி விட்டுக் கொடுத்ததாக கூறப்படும் இடையே இன்று டெல்லி அணிக்கு எதிராக தனது முழு பலத்தையும் நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மொத்தத்தில் இன்றைய போட்டியை ஐபிஎல் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோஹித் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்… ஏன் இந்திய அணிக்கு விளையாட முடியாது – சேவாக் குழப்பம்!