Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி விரித்த வலையில் ஜேமிசன் சிக்கவில்லை… டிம் சவுத்தி பாராட்டு!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (16:43 IST)
ஐபிஎல் தொடரின் போது கோலி கைல் ஜேமிசனுக்கு டியுக் பந்தால் வீச மறுத்தது சிறப்பான முடிவு என டிம் சவுதி கூறியுள்ளார்.

நியுசிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டர் கைல் ஜெமிசன் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் விளையாடி வருகிறார். இந்நிலையில் வலைப்பயிற்சியின் போது கோலி தனக்காக பந்துவீச கேட்ட போது ஜேமிசன் அதை மறுத்துள்ளாராம். அதற்குக் காரணம் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடக்க உள்ளது. அதனால் தன்னுடைய சூட்சுமங்களை கோலி டீகோட் செய்துவிடுவார் என்று அஞ்சி மறுப்பு தெரிவித்தாராம் ஜேமிசன். இதை சக வீரரான கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி இப்போது பேசியுள்ள நியுசிலாந்தின் முன்னணி பந்துவீச்சாளர் டிம் சவுத்தி ‘அந்த சம்பவம் உண்மைதான். கோலி கேட்டதும் எந்த சிரமும் இல்லாமல் அதற்கு ஜேமிசன் மறுத்தார். அத்தனைக்கும் அவரிடம் டியுக் பந்துகள் இருந்தன. கோலி நாசூக்காக விரித்த வலையில் விழாமல் ஜேமிசன் தப்பித்துவிட்டார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா vs இங்கிலாந்து: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. கொண்டாடிய சென்னை ரசிகர்கள்..!

ஹர்திக் ஏன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது புரியவில்லை... தினேஷ் கார்த்திக் ஆச்சர்யம்!

இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!

அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?

ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments