Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவனத்தை சிதறவைத்து சீன் போடுவதில் இந்திய அணி கில்லாடி… டிம் பெய்ன் புது கண்டுபிடிப்பு!

Webdunia
வியாழன், 13 மே 2021 (15:56 IST)
ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் களத்துக்கு வெளியே சீன் போடுவதில் இந்திய அணியை வெல்ல யாராலும் முடியாது எனக் கூறியுள்ளார்.

இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் ஆஸியில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனையைப் படைத்தது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலி இல்லாமல் வென்றது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் அந்த தோல்வி குறித்து இப்போது பேசியுள்ள ஆஸி கேப்டன் டிம் பெய்ன் ‘களத்துக்கு வெளியே கவனச்சிதறல்களை உருவாக்கி இந்தியா வென்றது’ எனக் கூறியுள்ளார்.

மேலும் ‘அவர்களிடம் விளையாடும்போது ஒன்றுமேயில்லாத விஷயத்தை பெரிது படுத்தி நமக்கு தேவையில்லாத தொல்லைகளைக் கொடுப்பார்கள். இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு நாங்கள் தோற்றுவிட்டோம். பிரிஸ்பேனில் விளையாட மாட்டோம் என சொன்னார்கள். இதனால் அடுத்த போட்டி எங்கு நடக்க போகிறது என்ற குழப்பம் எங்களுக்கு ஏற்பட்டது. இது போன்ற சீன்களை உருவாக்குவதில் அவர்கள் பெயர் பெற்றவர்கள்.’ என புதிது புதிதாக எதையெதையோ கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IPL-ஆ.. PSL.. ஆ? இரண்டில் எது சிறந்தது… இங்கிலாந்து வீரரின் வாயைக் கிளறிய பாக் ஊடகம்..!

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

அடுத்த கட்டுரையில்
Show comments