Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு' .. ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (20:26 IST)
தோனி சர்வதேசக் கிரிக்கெட்டில் இனி விளையாடுவது உறுதியாக தெரியாத நிலையில் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஐபிஎல் தொடர். செப்டம்பர் மாதம் அமீரகத்தில் நடக்க இருக்கும் தொடரை மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர். இந்நிலையில் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவாகதான் இருக்கும் என சொல்லப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி சென்னை அணி வீரர்கள் அமீரகம் செல்ல இருக்கின்றன.
 

இதற்காக சி எஸ் கே அணி வீரர்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சென்னை வர உள்ளனர். இங்கு 5 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளும் அவர்கள் அதன் பின்னே விமானம் ஏற உள்ளன. இந்நிலையில்

தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே வீரர்களுக்கு இன்று சென்னையில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தோனிக்கு கொரோனா இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 இந்நிலையில் , சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராஞ்சியில் இருந்து இன்று மாலை தனி விமானத்தில் தோனி சென்னை வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆனால் இன்று தோனி ஒரு முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். மேலும், தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் அவர் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்