Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி : இந்திய அணி பந்துவீச்சு !

டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி  : இந்திய அணி பந்துவீச்சு !
, ஞாயிறு, 8 மார்ச் 2020 (12:22 IST)
டி-20 உலகக் கோப்பை : இந்திய அணி பந்துவீச்சு !
மகளிர் உலகக் கோப்பை டி- 20 இறுதிப்போட்டி இன்று  மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
 
கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில், 10 நாடுகள் பங்கேற்றன. இந்தியா  சிறப்பாக செயல்பட்டதால், இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று முந்தினம் மோத வேண்டிய முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. லீக் சுற்றி முதலிடம் பிடித்த இந்திய அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
 
மற்றொரு ஆட்டதில் ஆஸ்திரேலியா அணி, தென்னாப்பிரியா அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
 
இந்நிலையில் டி -20 இறுதிப்போட்டி,இன்று மெல்போர்னில் நாளை நடந்துவருகிது. இதில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி கேப்டன் மெக் லெனிங் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.  கேப்டன் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியினர் தற்போது பந்துவீசி வருகின்றனர். 
 
மகளிர் டி 20 உலகப்கோப்பை போட்டியில் இந்தியா  வெற்றி பெற வேண்டும் என  ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி – மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா ?