Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி-20 உலகக் கோப்பை : இந்தியா - ஆஸ்திரேலியா நாளை மோதல் !

Advertiesment
மகளிர் கிரிக்கெட்
, சனி, 7 மார்ச் 2020 (17:16 IST)
டி-20 உலகக் கோப்பை : இந்தியா - ஆஸ்திரேலியா நாளை மோதல் !

 

நாளை, மகளிர் உலகக் கோப்பை டி- 20 இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. இதில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளது.
 
ஆஸ்திரேலிய நாட்டில், மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
 
கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில், 10 நாடுகள் பங்கேற்றன. இந்தியா  சிறப்பாக செயல்பட்டதால், இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று முந்தினம் மோத வேண்டிய முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. லீக் சுற்றி முதலிடம் பிடித்த இந்திய அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
 
மற்றொரு ஆட்டதில் ஆஸ்திரேலியா அணி, தென்னாப்பிரியா அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
 
இந்நிலையில் டி -20 இறுதிப்போட்டி,மெல்போர்னில் நாளை நடக்கவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதுகின்றன.
 
மகளிர் டி 20 உலகப்கோப்பை போட்டியில் இந்தியா  வெற்றி பெற வேண்டும் என  ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் ரகசியமாக ஒரு விஷயம் செய்த தோனி… ஆனாலும் கண்டுபிடித்த ரசிகர்கள் !