Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய பயணத்தால் சுதந்திரத்தை இழந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

Advertiesment
இந்திய பயணத்தால் சுதந்திரத்தை இழந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்
, சனி, 30 டிசம்பர் 2017 (00:55 IST)
சமீபத்தில் இந்திய சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 ஆகிய மூன்று தொடரையும் இழந்தது. ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே வென்று வெறுங்கையுடன் நாடு திரும்பிய இலங்கை அணிக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக சண்டிகா ஹதுருசிங்கா பொறுப்பேற்றுள்ளார். இவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற பின்னர் வீரர்கள் பல சுதந்திரங்களை இழந்துள்ளார்களாம். குறிப்பாக பயிற்சியின்போது ஹெட்போனில் இனி யாரும் பாட்டு கேட்கக்கூடாது என்று பயிற்சியாளர் சண்டிகா உத்தரவிட்டுள்ளாராம்

தங்களுக்கு இசை தான் முக்கியம் என்று கருதும் வீரர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்திய பயணத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாக தங்களுடைய சுதந்திரம் பறிபோனதாக இலங்கை வீரர்கள் புலம்புவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடும்பத்தை தனியே விட்டு சென்ற தவான்....