Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இலங்கை திணறல்

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (23:01 IST)
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி அபாரமாக பேட்டிங் செய்து 8 விக்கெட்டுக்களை இழந்து 414 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டவுரிச் 125 ரன்கள் குவித்தார்.
 
இந்த நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆரம்பம் முதல் திணறி வருகிறது. அந்த அணி ஆட்டநேரம் முடிவின்போது 3 விக்கெட்டுக்களை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. மெண்டிஸ், பெரரே மற்றும் மாத்யூஸ் ஆகிய மூன்று விக்கெட்டுக்கள் சொற்ப ரன்களுக்கு விழுந்தது. இன்னும் 7 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் 383 ரன்கள் இலங்கை அணி பின் தங்கியுள்ளது. 
 
இன்று 8வது ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில் ஃபாலோ ஆனை இலங்கை அணி தவிர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது கேப்டன் சண்டிமால் 31 பந்துகளுக்கு 3 ரன்களும், சில்வா ஒரு ரன்னும் எடுத்தும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments