Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சவுத்தீ அபாரம்… 8 விக்கெட்களை இழந்த இந்தியா!

சவுத்தீ அபாரம்… 8 விக்கெட்களை இழந்த இந்தியா!
, வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:02 IST)
நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சவுத்தீ அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

நியுசிலாந்து அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் 16 ஆவது இந்திய வீரராக பட்டியலில் இணைந்துள்ளார். சதமடித்து மேலும் 5 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஸ்ரேயாஸ் 105 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதற்கடுத்து வந்த வீரர்களில் அஸ்வின் மட்டுமே நிலையாக நிற்க மற்றவர்கள் சவுத்தீ பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சவுத்தீ அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சற்று முன்பு வரஒ இந்திய அணி 319 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் காலவரையறையற்ற விலகல்… டிம் பெய்ன் அறிவிப்பு!