Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போராடி தோல்வியடைந்த இந்திய அணி: கோலிக்கு முதல் அடி!

போராடி தோல்வியடைந்த இந்திய அணி: கோலிக்கு முதல் அடி!
, திங்கள், 8 ஜனவரி 2018 (20:35 IST)
தென் ஆப்பரிக்கா - இந்தியா அணிகள் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கேட் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
தென் ஆப்பரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 77 ரன்கள் பின்னடைவில் இருந்தது.
 
இதையடுத்து இரண்டாவது தொடங்கிய தென் ஆப்பரிக்க அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மூன்றாவது நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து. இன்று நாளவது நாளில் தென் ஆப்பரிக்க அணி விரைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 135 ரன்கள் குவிந்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியால் கூட முடியாததை சாதித்து காட்டிய விக்கெட் கீப்பர் சாஹா!