Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிசிசிஐ தலைவரானார் கங்குலி!! தாதாவின் புதிய அவதாரம்

பிசிசிஐ தலைவரானார் கங்குலி!! தாதாவின் புதிய அவதாரம்
, திங்கள், 14 அக்டோபர் 2019 (15:38 IST)
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். 
 
பிசிசிஐயின் தலைவர் பதவி மற்றும் மற்ற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் முடிகிறது. 
 
இந்நிலையில் சவுரவ் கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலி, பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். 
webdunia
வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்ற போதிலும் பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலியை எதிர்த்து இன்னும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யததால் கங்குலில் ஒருமனதாக பிசிசிஐ தலைவராக் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்பட்டது. 
 
அதற்கேற்ப ஐபிஎல் சேர்மென், முன்னாள் பிசிசிஐ நிர்வாகி ராஜீவ் சுக்லா இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என அறிவித்துள்ளார். இது கங்குலில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜே ஷா புதிய செயலாளராகவும், அருண் துமால் புதிய பொருளாளராகவும் இருப்பார்கள். அருண் துமால் பிசிசிஐ முன்னாள் தலைவருமான அனுராக் தாக்கூரின் சகோதரர் ஆவார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிசிசிஐ தலைவர் பதவி சவாலான சிறந்த உணர்வு: கங்குலி பேட்டி!!