Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிசிசிஐ தலைவர் ஆகின்றாரா சவுரவ் கங்குலி?

பிசிசிஐ தலைவர் ஆகின்றாரா சவுரவ் கங்குலி?
, திங்கள், 14 அக்டோபர் 2019 (06:56 IST)
பிசிசிஐயின் தலைவர் பதவி மற்றும் மற்ற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் முடிகிறது.
 
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
 
தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக இருந்து வரும் சவுரவ், பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
webdunia
ஏற்கனவே பிசிசிஐ செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா, பொருளாளர் பதவிக்கு பிசிசிஐயின் முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் துமால் ஆகியோர் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ள நிலையில் தலைவர் பதவிக்கு கங்குலியை எதிர்த்து இன்னும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மண்ணை கவ்விய தென்னாப்பிரிக்க: இந்திய அணி அபார வெற்றி!!