Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தயார் – இளம் வீரருக்கு வாய்ப்புக் கொடுப்பாரா தினேஷ் கார்த்தி?

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தயார் – இளம் வீரருக்கு வாய்ப்புக் கொடுப்பாரா தினேஷ் கார்த்தி?
, வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (11:02 IST)
கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சுப்மன் கில் தான் தொடக்க ஆட்டக்காரராக விளையாட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இருமுறை கோப்பையை வென்ற பெருமைக்குரியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அந்த அணிக்கு இப்போது தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் தலைமை தாங்குகிறார். போன ஆண்டே அவர் தலைமை குறித்து அணிக்குள் புகைய ஆரம்பித்தது. ஆனாலும் அவர் மேல் நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் கேப்டனாக தொடர அனுமதித்துள்ளது.

இந்நிலையில் அந்த அணியில் இடம்பெற்றுள்ள சுப்மன் கில் தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக தொடங்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு முழுவதும் அவர் பின் வரிசையில் இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த ஆண்டாவது அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் சிறந்த வீரர் விராட் கோலி! சொன்னது யார் தெரியுமா?