Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ தலைவரானதால் ரூ.7 கோடி நஷ்டமடையும் கங்குலி!

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (20:08 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி சமீபத்தில் பிசிசிஐயின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பதவியில் அவர் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் ஆனதால் சவுரவ் கங்குலிக்கு சுமார் 7 கோடி வரை வருமான இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. தற்போது டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், கிரிக்கெட் வர்ணனையாளராகவும், ஐபிஎல் தொடரில் டெல்லி கிரிக்கெட் அணியின் ஆலோசகராகவும், தொலைக்காட்சியில் கிரிக்கெட் நிபுணராகவும் இருந்து வருவதால் அவருக்கு பல்வேறு வருமானங்கள் கோடிக்கணக்கில் வந்து கொண்டிருக்கின்றது 
 
ஆனால் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் அவர் அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் சுமார் 7 கோடி ரூபாய் வருமானத்தை இழக்க நேரிடும் என கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி பிசிசிஐ தலைவர் ஆகி விட்டதால் அவர் எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments