Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ தலைவரானதால் ரூ.7 கோடி நஷ்டமடையும் கங்குலி!

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (20:08 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி சமீபத்தில் பிசிசிஐயின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பதவியில் அவர் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் ஆனதால் சவுரவ் கங்குலிக்கு சுமார் 7 கோடி வரை வருமான இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. தற்போது டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், கிரிக்கெட் வர்ணனையாளராகவும், ஐபிஎல் தொடரில் டெல்லி கிரிக்கெட் அணியின் ஆலோசகராகவும், தொலைக்காட்சியில் கிரிக்கெட் நிபுணராகவும் இருந்து வருவதால் அவருக்கு பல்வேறு வருமானங்கள் கோடிக்கணக்கில் வந்து கொண்டிருக்கின்றது 
 
ஆனால் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் அவர் அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் சுமார் 7 கோடி ரூபாய் வருமானத்தை இழக்க நேரிடும் என கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி பிசிசிஐ தலைவர் ஆகி விட்டதால் அவர் எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments