350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்.. சவுதி அரேபியாவின் சாதனை திட்டம்..!

Siva
புதன், 29 அக்டோபர் 2025 (08:06 IST)
சவுதி அரேபியா தனது தொலைநோக்கு திட்டமான 'விஷன் 2030'-இன் கீழ், உலகிலேயே மிகவும் உயரமான கால்பந்து மைதானத்தைக் கட்ட திட்டமிட்டுள்ளது.
 
நியோம் பகுதியில் அமையவிருக்கும் இந்த திடல், 350 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு, உலகின் மிக உயரமான மைதானம் என்ற சாதனையை படைக்கும்.  'நியோம் ஸ்டேடியம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கில் 46,000 பார்வையாளர்கள் அமர முடியும்.
 
இது சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தியை பயன்படுத்தி இயக்கப்படவுள்ளதால், சுற்றுச்சூழல் நட்பு அம்சங்களை கொண்டுள்ளது. 2027-இல் பணிகள் துவங்கி, 2032-க்குள் கட்டி முடிக்கப்பட உள்ள இந்த மைதானம், 2034 பிஃபா உலகக்கோப்பை போட்டிகளை நடத்தும் இலக்குடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
 
எண்ணெய் வளத்தை தாண்டி, உலகளாவிய சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் சவுதியின் 'விஷன் 2030' திட்டத்தில், இந்த வானளாவிய கால்பந்துத்திடல் ஒரு முக்கிய பகுதியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

ஐசியுவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்ப்ட்ட ஸ்ரேயாஸ் ஐயர்… வெளியானப் புகைப்படம்!

நான் இன்னும் அதிக வாய்ப்புகளுக்குத் தகுதியானவன்… கருண் நாயர் ஆதங்கம்!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. ஒரு போட்டியில் கூட வெல்லாமல் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்..

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி… கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்!

அடுத்த கட்டுரையில்
Show comments