Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடைசி பந்தில் நோபால்.. சந்தீப் சர்மா தவறால் வெற்றி பெற்ற ஐதராபாத்..!

Advertiesment
கடைசி பந்தில் நோபால்.. சந்தீப் சர்மா தவறால் வெற்றி பெற்ற ஐதராபாத்..!
, திங்கள், 8 மே 2023 (07:27 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சந்திப் சர்மா கடைசி பந்தில் நோபால் போட்டதால் ஹைதராபாத் அணி அபாரமாக வெற்றி பெற்றது. 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்கள் எடுத்தது. ஜாஸ் பட்லர் அபாரமாக விளையாடி 95 ரன்கள் எடுத்தார். 
 
இதனை அடுத்து 215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஹைதராபாத் விளையாடிய நிலையில் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. முதல் 5 பந்துகளில் 12 ரன்கள் அடித்த நிலையில் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிலை இருந்தது. ஆனால் கடைசி பந்தை சந்திப் சர்மா  விக்கெட் எடுத்ததை அடுத்து ராஜஸ்தான அணியினர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த பந்து நோபால் என அம்பயர் அறிவித்ததை எடுத்து கடைசி பந்தில் நான்கு ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது.  அந்த பந்தில் அப்துல் சமது சிக்சர் அடித்ததால் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
 
ஒரே ஒரு நோபால் வீசியதால் ராஜஸ்தான் அணி தனது கையில் இருந்த வெற்றியை ஹைதராபாத் அணியிடம் பறி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன கில் நீங்க.. மறுபடியும் சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்! – ரசிகர்கள் வருத்தம்!