Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவசரப்பட்டு ஓய்வை அறிவித்துவிட்டேன், தொடர்ந்து விளையாடுவேன்: சானியா மிர்சா

அவசரப்பட்டு ஓய்வை அறிவித்துவிட்டேன், தொடர்ந்து விளையாடுவேன்: சானியா மிர்சா
, புதன், 26 ஜனவரி 2022 (11:23 IST)
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்த நிலையில் அவசரப்பட்டு ஓய்வு முடிவை அறிவித்து விட்டதாகவும் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்த தொடருடன் ஓய்வு பெறப்போவதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார். ஆனால் தற்போது அவர் இந்த சீசன் உடன் ஓய்வு பெறப் போவதாக அவசரப்பட்டு அறிவித்து விட்டேன் என்றும் அதற்காக வருத்தப்படுகிறேன் என்றும் இந்த ஆண்டு இறுதி வரை அனைத்து போட்டிகளிலும் விளையாடுவேன் என்றும் அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் வெற்றி அல்லது தோல்வி என எதுவாக இருந்தாலும் 100% எனது திறமையை வெளிப்படுத்தி விளையாடுவேன் என்றும் சில நேரங்களில் வெற்றி கிடைக்கும் தவிர ஏமாற்றமும் வரும் என்றும் மற்றபடி நான் விளையாடும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி எனக்கு எதுவும் சொல்லித்தரவில்லை… ஹர்திக் பாண்ட்யா!