Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாய்னா நேவலுக்கு கொரோனா தொற்று: தாய்லாந்து தொடரில் இருந்து விலகினார்

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (12:06 IST)
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் விளையாடுவதற்காக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிவி சிந்து உள்ளிட்ட வீராங்கனைகள் பாங்காங் சென்றனர் என்பது தெரிந்ததே. அவர்கள் பாங்காங்கில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த நிலையில் இன்று மலேசிய வீராங்கனை கிசானோ என்பவரை எதிர்த்து சாய்னா நேவல் விளையாட இருந்தார் 
 
போட்டி தொடங்குவதற்கு முன்பாக சாய்னா நேவாலுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று அவர் மலேசிய வீராங்கனையுடன் விளையாடும் போட்டி ரத்து செய்யப்பட்டது என்பதும் இந்த தொடரில் இருந்தும் சாய்னா நேவால் விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சாய்னா நேவால் தாய்லாந்து நாட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவின் முன்னணி பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  
 
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments