Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிம் பெய்ன் தனது நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார் – சுனில் கவாஸ்கர் கருத்து!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (11:25 IST)
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் தனது கேப்டன் பதவியின் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் மீதான விமர்சனங்கள் சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பின்னர் அதிகமாகியுள்ளன. அவர் சரியாக பேட்டிங் செய்வதில்லை என்றும் கேட்ச்களை சரியாக பிடிப்பதில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் டிம் பெய்ன் கேப்டன் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படலாம் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ‘அவர் வீரர்களை பீல்டிங்கில் நிற்கவைப்பதை விட கிரீஸில் நிற்கும் எதிரணி பேட்ஸ்மேன்களிடம் பேசுவதில்தான் நேரத்தை செலவிடுகிறார். அதானல் அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அற்புதமான பந்துவீச்சாளர்களை வைத்துகொண்டு அவர் இந்தியாவை 131 ஓவர்கள் விளையாட வைத்துள்ளார் என்றால் அது அவரின் தவறுதான்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனியர் வீரருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் ஒரே மரியாதைதான்.. பஞ்சாப் அணி குறித்து ஷஷாங் சிங் பெருமிதம்!

ஒவ்வொரு போட்டியும் நாங்களா செதுக்குனது..! பஞ்சாப் கிங்ஸ் வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எந்த டிவியில், எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சச்சின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்.. குவியும் வாழ்த்துக்கள்

டெஸ்ட் போட்டிகளில் கோலியின் ‘இன்மை’யை உணர்வேன் – கேப்டன் ஷுப்மன் கில் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments