Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவின் ஒலிம்பிக் தூதரானார் சச்சின்

Advertiesment
இந்தியாவின் ஒலிம்பிக் தூதரானார் சச்சின்
, செவ்வாய், 3 மே 2016 (17:19 IST)
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் தூதராக செயல்பட இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் இந்திய ஒலிம்பிக் தூதர் பட்டியலில் மூன்றாவது நபராக இணைந்துள்ளார்.


 
 
ரியோ ஒலிம்பிக்ஸ் 2016 போட்டிக்காக இந்தியா சார்பில் தூதராக செயல்பட சச்சின் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்பியது இந்திய ஒலிம்பிக் சங்கம். இந்த அழைப்பிதல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட சச்சின், தற்போது இந்திய தூதராகியுள்ளார்.
 
இதையடுத்து, ஏற்கனவே சல்மான்கான், அபினவ் பிந்த்ரா ஆகியோர் தேர்வாகியுள்ள நிலையில், சச்சின் மூன்றாவது தூதராக அவர்களுடன் இணைந்துள்ளார். மேலும், சச்சினுக்கு அடுத்து ஏ.ஆர்.ரகுமான் விரைவில் அழைப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்டு இந்தியா சார்பில் தூதராவார் என்றும், சல்மான்கானுக்கு பதில் வேறொரு பிரபலத்தை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்றும், இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜிவ் மெக்தா தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளை கொஞ்சும் தோனி: இணையத்தில் பரவும் புதிய புகைப்படங்கள்