Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரெக்கார்ட் படைக்குறதெல்லாம் எனக்கு தினசரி வேலை… ரொனால்டோவின் மைல்கல் சாதனை!

ரெக்கார்ட் படைக்குறதெல்லாம் எனக்கு தினசரி வேலை… ரொனால்டோவின் மைல்கல் சாதனை!

vinoth

, புதன், 28 ஆகஸ்ட் 2024 (10:09 IST)
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையை அவரிடம்தான் உள்ளது.

கிளப் போட்டிகளில் கிட்டத்தட்ட அனைத்துக் கோப்பைகளையும் வென்றுவிட்டாலும், இன்னும் ரொனால்டோ கால்பந்து உலகக் கோப்பையை தனது அணிக்காக வெல்லவில்லை. தற்போது 38 வயதாகும் ரொனால்டோ தனது ஓய்வு குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். அதில் “இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கால்பந்தில் இருந்து ஓய்வுபெற்றுவிடுவேன். ஓய்வு பெற்ற பிறகு கால்பந்து க்ளப் ஒன்றை வாங்கும் எண்ணம் உள்ளது. பயிற்சியாளராக ஆகும் எண்ணம் இல்லை” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவர் கால்பந்து உலகில் 900 கோல்கள் அடிக்கும் முதல் வீரர் என்ற சாதனையை விரைவில் படைக்க உள்ளார். சவுதி ப்ரோ லீக் அணிக்கு எதிராக அவர் நேற்று அடித்த கோலின் மூலம் 899 கோல்கள் அடித்துள்ளார். இன்னும் ஒரே ஒரு கோல் அடித்தால் கால்பந்து உலகில் யாருமே படைக்காத சாதனையை அவர் படைக்கவுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் மிகச்சிறந்த பினிஷர் என்றால் அது சந்தேகமே இல்லாமல் கோலிதான்… ஜாம்பவான் பவுலர் பாராட்டு!