Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மா ஒரு பொக்கிஷம்! புகழ்ந்து தள்ளிய இந்திய பவுலர்!

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (08:53 IST)
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் துணை கேப்டனுமான ரோஹித் ஷர்மாவை கிரிக்கெட்டின் பொக்கிஷம் என முகமது ஷமி புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் சிறந்த வீரர்களில் ஒருவராவார். இதுவரை 3 முறை ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்துள்ள அவர் 400 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். இதனால் அவரை ரசிகர்கள் செல்லமாக ஹிட்மேன் என அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கிரிக்கெட் வீரர்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் உரையாடி வரும் நிலையில் இர்பான் பதானும் முகமது ஷமியும் உரையாடினர். அப்போது ரோஹித் ஷர்மா பற்றி பேசிய ஷமி ‘ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆடுவது போன்றே தெரியாது; ஆனால் எதிரணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்துவிடுவார். அவர் ஒரு பொக்கிஷம் போன்றவர். கிரிக்கெட்டை கற்றுக்கொடுக்க அவர் மிகச்சிறந்த உதாரணம். அவர் சுத்தமான கிரிக்கெட்டர்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

ஹர்திக் என்னுடையவன்… அவன் இல்லாமல் உலகக் கோப்பை இல்லை – முத்தம் குறித்த சீக்ரெட்டைப் பகிர்ந்த ரோஹித்!

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments