Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமண நாள் பரிசாக இரட்டை சதம்; கண்ணீர் விட்ட ரோகித் மனைவி

திருமண நாள் பரிசாக இரட்டை சதம்; கண்ணீர் விட்ட ரோகித் மனைவி
, புதன், 13 டிசம்பர் 2017 (16:57 IST)
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ருத்திரதாண்டவம் ஆடிய ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசினார்.

 
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்தது. கோலி ஓய்வில் இருப்பதால் தற்போது ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ரோகித் சர்மா களத்தில் ருத்திரதாண்டவம் ஆடினார். சதம் அடிக்கும் வரை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா அடுத்த 36 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார். மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்தது. முதல் ஒருநாள் போட்டியில் இந்த அணி வீரர்களை திணறடித்த இலங்கை பந்துவீச்சாளர் லக்மல் வீசிய ஓரே ஓவரில் 4 சிஸ்கர் விளாசி அசத்தினார்.
 
தனது இரட்டை சதத்தை மனைவிக்கு திருமண நாள் பரிசாக கொடுத்தார். இன்று அவருக்கு இரண்டாவது திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது. மைதானத்தில் ரோகித் மனைவி ஆனந்த கண்ணீர் விட்டார். ரோகித் ஒவ்வொரு முறையும் பந்தை எதிர்கொள்ளும் போதும் மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டார். இறுதியில் ரோகித் இரட்டை சதம் அடித்தவுடன் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ருத்திரதாண்டவம் ஆடிய ரோகித் இரட்டை சதம்; இலங்கைக்கு 393 ரன்கள் இலக்கு