Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒலிம்பிக்கில் களமிறங்கும் ரோஜர் பெடரர்!

ஒலிம்பிக்கில் களமிறங்கும் ரோஜர் பெடரர்!
, செவ்வாய், 6 ஜூலை 2021 (10:29 IST)
டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள உள்ளார் என சொல்லப்படுகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யவேண்டும் என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 3. 5 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஆனாலும் பாதுகாப்பாக ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்திருந்த சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர் கலந்துகொள்ளப் போகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திர முதல்வரை சந்தித்த அனில் கும்ப்ளே!