Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து திடீரென விலகிய ரோஜர் பின்னி.. இடைக்கால தலைவர் யார்?

Advertiesment
Roger Binny

Mahendran

, வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (18:35 IST)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த ரோஜர் பின்னி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக, துணை தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பிசிசிஐ உறுப்பினர் தேர்வு விதிகளின்படி, ஒரு நபர் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்கலாம். ஒன்பது ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதவி வகிக்கலாம். ஆனால், ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்தால், அவர்கள் கண்டிப்பாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விதிமுறையின் அடிப்படையில் ரோஜர் பின்னி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராஜீவ் சுக்லா, பிசிசிஐ தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் வரை இந்த பதவியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் ஆசிய கோப்பை ஹாக்கி மற்றும் புரோ கபடி தொடக்கம்.. ரசிகர்கள் குஷி..!