Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாலை பாதுகாப்பு கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்!

சாலை பாதுகாப்பு கிரிக்கெட்:  இந்திய அணி சாம்பியன்!
, திங்கள், 22 மார்ச் 2021 (07:00 IST)
சாலை பாதுகாப்பு கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்
சாலை பாதுகாப்பு கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு இடையே நடத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது
 
 முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் 62 ரன்கள், யுவராஜ்சிங் 60 ரன்கள், சச்சின் டெண்டுல்கர் 30 ரன்கள் எடுத்தனர் 
 
 இதனை அடுத்து 182 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜெயசிங்க 40 ரன்களும் ஜெயசூர்யா 43 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து இந்திய அணி் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றது
 
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக யூசுப் பதானும், தொடர் நாயகனாக திலகரத்ன தில்ஷனும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணி சூப்பர் வெற்றி... டி-20 தொடரைக் கைப்பற்றியது !