Publish Date: Sat, 20 Mar 2021 (20:50 IST)
Updated Date: Sat, 20 Mar 2021 (20:56 IST)
ஐந்தாவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றுபெற்றுள்ளன.
எனவே இன்று குர்ஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறும் 5 வது மற்றும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று யார் தொடரைக் கைப்பற்றப்போகிறார்கள் என ஆர்வம் எழுந்துள்ளது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்தப் போட்டிகளைக் கண்டுவருகின்றனர். இதில் இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியா பேட்டிங்கில் கைகொடுக்கிறதா எனப் பார்ப்போம். இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.