Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்து ஏற்பட்டது எப்படி: கண்விழித்த ரிஷப் பண்ட் வாக்குமூலம்!

rishap
Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (14:24 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் இன்று காலை விபத்துக்குள்ளான நிலையில் ரிஷப் பண்ட் கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் சற்று முன் அவர் மருத்துவமனையில் கண் விழித்த நிலையில் போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது காரை தானே ஓடியதாகவும் காரை ஓட்டிக் கொண்டிருந்த போது தூக்கம் காரணமாக அசந்து விட்டதாகவும் அதனால்தான் விபத்துக்குள்ளானதாகவும் ரிஷப் பண்ட் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 
 
இதனை அடுத்து இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ரிஷப் பண்ட் காலில் லேசாக எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் முழுமையாக குணம் அடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

சிஎஸ்கே அணி வீரரின் தந்தை காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

உங்களை இந்திய ஜெர்ஸியில் பார்க்க ஆசைப்படுகிறேன்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

போட்டியில் தோற்றால் கூட பார்ட்டி கேட்பார்கள்… வெளிநாட்டு வீரர்கள் குறித்து சேவாக் காட்டம்!

ஐதராபாத் மைதானத்தில் முகமது அசாரூதின் ஸ்டாண்ட் பெயர் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments