Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலி இன்னும் ஐபிஎல் கோப்பையே வெல்லவில்லை… ரெய்னா சொன்ன கருத்து!

கோலி இன்னும் ஐபிஎல் கோப்பையே வெல்லவில்லை… ரெய்னா சொன்ன கருத்து!
, திங்கள், 12 ஜூலை 2021 (16:55 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லாதது குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக கோலி தலைமையேற்றதில் இருந்து கலந்துகொள்ளும் தொடர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடி உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியா இருந்து வருகிறது. ஆனால் அவர் தலைமையில் இன்னும் ஐசிசி கோப்பை எதுவும் வெல்ல முடியவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ‘கோலி உலகின் தலை சிறந்த கேப்டன். அவர் படைத்த சாதனைகள் மூலமாக நாம் இதை உணர்ந்துகொள்ளலாம். ஆனால் ஐசிசி கோப்பைகள் பற்றி கேட்டால் அவர் இன்னும் ஐபிஎல் தொடரையே வெல்லவில்லை. அவருக்கு இன்னும் அவகாசம் கொடுக்கவேண்டும். டி 20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை வரை அவரை கேப்டனாக இருக்க அனுமதிக்க வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விம்பிள்டன் டென்னிஸ்: செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன்!