Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலி vs பிசிசிஐ தேர்வுக்குழு மோதல்… மழுப்பல் பதில் சொல்லி எஸ்கேப் ஆன கங்குலி!

கோலி vs பிசிசிஐ தேர்வுக்குழு மோதல்… மழுப்பல் பதில் சொல்லி எஸ்கேப் ஆன கங்குலி!
, வெள்ளி, 9 ஜூலை 2021 (12:19 IST)
இங்கிலாந்துக்கு தேவ்தத் படிக்கல்லை அனுப்புவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் காயம் காரணமாக விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் உடலில் உள்காயங்கள் இருப்பதால் அதற்கான சிகிச்சை எடுக்காமல் விளையாடினால் காயம் மேலும் அதிகமாகலாம் என்பதால் அவர் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவருக்குப் பதில் மாற்று வீரராக பிருத்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரை கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கேட்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இலங்கையில் இருக்கும் அவர்களை அனுப்ப முடியாது என தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே போல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் ‘கோலியின் முன்னணியில்தான் அணித்தேர்வு செய்தோம். இருக்கும் அணியை எவ்வாறு சிறப்பாகக் கையாள வேண்டுமென்றுதான் அணி நிர்வாகம் யோசிக்கவேண்டும். அணியில் ராகுல் இருக்கிறார். ஒருவேளை மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினால் ராகுல் பின்னிலை பேட்ஸ்மேனாக செயல்படுவார்’ எனக் கூறி கோலியின் முடிவுக்கு எதிராக பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கங்குலியிடம் தேவ்தத் படிக்கல் அல்லது பிருத்வி ஷா இங்கிலாந்துக்கு அனுப்பப்படுவார்களா என்ற கேள்விக்கு கங்குலி ‘இது தேர்வுக்குழுவின் விவகாரம்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் அணியைப் பந்தாடிய இங்கிலாந்து பி டீம்!