இங்கிலாந்து அணி 7 ரன்களுக்கு ஒரு விக்கெட்: மீண்டும் மழையால் ஆட்டம் பாதிப்பு

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (17:08 IST)
இங்கிலாந்து அணி 7 ரன்களுக்கு ஒரு விக்கெட்
கடந்த 13ம் தேதி ஆரம்பித்த இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக அவ்வப்போது தடைபட்டு வருகிறது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இன்று நான்காவது நாளாக தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணி 236 ரன்கள் எடுத்திருந்தபோது ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. இதனால் இன்றைய ஆட்டமும் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மொத்தமுள்ள ஐந்து நாட்களில் நான்கு நாட்கள் மழையால் அவ்வப்போது தடைபட்டு இன்னும் ஒரு இன்னிங்ஸ் கூட முடிவடையவில்லை என்பதால் இந்த போட்டி டிரா என்பது உறுதி செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments