Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் எடுத்த முடிவுகளுக்கு வேறு சிலர் பாராட்டுகளைப் பெற்றனர்… ரஹானே ஆதங்கம்!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (10:40 IST)
இந்திய அணியின் முன்னாள் துணைக் கேப்டன் அஜிங்க்யே ரஹானே இப்போது மோசமான காலகட்டத்தில் உள்ளார்.

ஒரு காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் தூண்களில் ஒருவரான அஜிங்க்யே ரஹானே இப்போது தனக்கான இடத்தைத் தக்க வைக்கவே போராடிக் கொண்டு இருக்கிறார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் அவர் விளையாடியதுதான் அவரின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என பலரும் ஆருடம் கூறியுள்ளனர்.

இந்நிலயில் சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில் ரஹானே பல விஷயங்களை மனம்விட்டு பேசியுள்ளார். அதில் ஆஸ்திரேலியாவில் அவர் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது குறித்தும் பேசியுள்ளார். அந்த நேர்காணலில் ‘அந்த தொடரில் நான் சில தைரியமான முடிவுகளை எடுத்தேன். ஆனால் அதற்கான பாராட்டுகளை வேறு சிலர் பெற்றனர். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக சிலர் பேசுகின்றனர். கிரிக்கெட்டை உண்மையாக நேசிப்பவர்கள் அப்படி பேசமாட்டார்கள்’ எனக் கூறியுள்ளார். ரஹானே முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மனதில் வைத்துதான் அப்படி பேசுவதாக சலசலப்புகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments