Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளி பதக்கம்: சிந்துவை பாராட்டிய மோடி!

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (17:47 IST)
ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று மகளிருக்கான பாட்மிண்டன் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. 
 
இப்போட்டியில் சிந்துவை 13-21, 16-21 என்ற நேர் செட்களில், வீழ்த்தி சீன தைப்பே நாட்டு வீராங்கனையான டாய் ஸூயிங் வெற்றி கண்டார். பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
 
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் எந்த ஒரு வீரரும், வீராங்கனையும் இதற்கு முன்னர் வெள்ளிப் பதக்கம் வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சிந்துவை பாராட்டியுள்ளார். அதில், சிந்து ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். பி.வி சிந்து இந்தியாவின் சிறந்த திறமை மிக்க, ஊக்கமளிக்கும் வீரர்களில் ஒருவர். அவரது திறமை மற்றும் விடாமுயற்சி பாராட்டுக்குரியது என் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

அடுத்த கட்டுரையில்
Show comments