Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக பேட்மிண்டன் இறுதிப்போட்டி - இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி

உலக பேட்மிண்டன் இறுதிப்போட்டி - இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி
, திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (09:47 IST)
உலக பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் போராடி தோல்வியடைந்துள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து காலிறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்,
 
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வந்தது.
 
காலிறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நோசொமி ஒக்குஹாராவை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை சிந்து அபாரமாக வெற்றி பெற்று அரையிறுதி சுற்றிற்கு தகுதிபெற்றார்.
webdunia
பின் அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகேனா யமகுச்சியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.
 
இந்நிலையில் நேற்றைய இறுதிச்சுற்றில் பி.வி.சிந்து–கரோலினா மரின் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். ஆட்டம் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார் கரோலினா.
 
சிந்து கடுமையாக முயற்சி செய்தும் 21-19, 21-10 என்ற கணக்கில் கரோலினா சிந்துவை வீழ்த்தினார். இதன்மூலம் கரோலினார் தங்கப்பதக்கம் வென்று உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். 
webdunia
இந்திய வீராங்கனை சிந்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை சிந்து அடைந்துள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.என்.பி.எல் கிரிக்கெட்: திருச்சி அணிக்கு மேலும் ஒரு வெற்றி