Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை காபாற்றியது டிராவிட் சொன்ன அறிவுரை! புஜாரா நெகிழ்ச்சி!

என்னை காபாற்றியது டிராவிட் சொன்ன அறிவுரை! புஜாரா நெகிழ்ச்சி!
, திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:41 IST)
ராகுல் டிராவிட் கொடுத்த ஐடியாதான் என்னைக் காப்பாற்றியது என் புஜாரா கூறியுள்ளார்.

சென்னை அணி கடந்த சில ஆண்டுகளாக இளம் வீரர்களைக் காட்டிலும் 30 வயதைத் தாண்டிய மூத்த வீரர்களையே தங்கள் அணியில் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதனால் ரசிகர்கள் சிஎஸ்கேவை டாடீஸ் டீம் என கேலி செய்வது உண்டு. இந்நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் ஏலத்திலும் மொயின் அலி மற்றும் புஜாரா ஆகிய மூத்த வீரர்களையே அதிகம் ஏலத்தில் எடுத்துள்ளது. அதிலும் டெஸ்ட் போட்டிகளில் சுவர் போல நின்று ஆடும் புஜாராவை எந்த அணியும் எடுக்காத போது சென்னை அணி அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டது இந்த ஆண்டுதான்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் டி 20 போட்டியில் ஆடுவது குறித்து பேசியுள்ள புஜாரா ‘டி 20 போட்டிகளில் அதிகமாக விளையாடினால் என்னை விட்டு டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் ராகுல் டிராவிட் கொடுத்த அறிவுரைதான் என்னைக் காப்பாற்றியது. பல விதமான ஷாட்களை ஆடுவதால் உன்னுடைய இயல்பான திறமை போய்விடும் என நினைக்காதே’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் தேவ்தத் படிக்கல் அணியில் இணைவார்… ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு!