Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டிகள்: டெல்லி, பெங்களூர் அணிகள் அபார வெற்றி

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (07:45 IST)
புரோ கபடி போட்டிகள் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் டெல்லி மற்றும் அரியானா அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தது. அரியானா அணியினர் மிகக் குறைந்த புள்ளிகளை முதல் பாதியில் எடுத்திருந்தனர். இரண்டாம் பாதியிலும் டெல்லி அணியின் கையே ஓங்கியிருந்தது. இறுதியில் டெல்லி அணி 41 புள்ளிகளூம், அரியானா அணி 21 புள்ளிகளும் பெற்றதால்  20 புள்ளிகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து அதே மைதானத்தில் நடந்த அடுத்த போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் சம அளவில் தங்கள் திறமையை காட்டி விளையாடியதால் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியில் பெங்களூர் அணி 30 புள்ளிகளும், மும்பை அணி 26 புள்ளிகளும் எடுத்ததால் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியின் வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டியின் பின்னர் டெல்லி அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி 11 புள்ளிகளும் குஜராத், ஜெய்ப்பூர், பெங்களூரு அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments