Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக்கம் அணிக்கு 3வது வெற்றி

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (07:30 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற கோவை அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்த அணி திருச்சி, காரைக்குடி ஆகிய இரண்டு அணிகளை வென்றுள்ள நிலையில் நேற்று கோவை அணியையும் வெற்று மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 116 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய சேப்பாக்கம் சூப்பர் கிங்ஸ் அணி 13.3 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
கோபிநாத் மிக அபாரமாக விளையாடி 41 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார். இதில் 10 பவுண்டரிகளும் 4 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சேப்பாக்கம் அணியின் ஹரிஷ்குமார் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளதால் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் 
 
நேற்றைய போட்டிக்கு பின்னர் சேப்பாக்கம் அணி மற்றும் திண்டுக்கல் அணி தலா 6 புள்ளிகள் பெற்றுள்ளது. காஞ்சி மற்றும் கோவை அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

“இம்பேக்ட் ப்ளேயர் விதியை நீக்கக் கூடாது… எப்பவும் எதிர்க்க சில பேர் இருப்பார்கள்” முன்னாள் இந்திய வீரர் கருத்து!

இந்திய ரசிகர்களுக்காக அரையிறுதியில் மாற்றம் செய்த ஐசிசி… டி 20 உலக கோப்பையில் நடந்த மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments