Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புரோ கபடி போட்டி: குஜராத், பாட்னா அணிகள் வெற்றி

புரோ கபடி போட்டி: குஜராத், பாட்னா அணிகள் வெற்றி
, வெள்ளி, 26 ஜூலை 2019 (23:03 IST)
புரோ கபடி லீக் போட்டிகளில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதலாவது போட்டியில் உத்தரப்பிரதேச அணியும் குஜராத் அணியும் மோதியது. இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வ்நத குஜராத் அணிக்கு ஈடுகொடுக்கும் வகையில் உபி அணி கொஞ்சம் கூட முயற்சி கூட எடுக்கவில்லை என்பது பரிதாபத்திற்குரியதாக இருந்தது. இதனை அடுத்து குஜராத் அணி 44 புள்ளிகளும், உபி அணி 19 புள்ளிகளும் எடுத்தன. 
 
இதனை அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் பாட்னா அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பாட்னா அணி 34 புள்ளிகளும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 22 புள்ளிகளும்,  எடுத்ததால் பாட்னா அணி 12 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இன்றைய லீக் போட்டிகள் முடிந்த பின்னர் குஜராத் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் டெல்லி அணி அதே 10 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் தமிழ் தலைவாஸ் மற்றும் பாட்னா அணிகள் தலா 6 புள்ளிகள் பெற்று மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும் உள்ளன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: காரைக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லிஸ்