Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (22:48 IST)
புரோ கபடி போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு சில போட்டிகள் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் படு மோசமாக விளையாடி வரும் நிலையில் நேற்று வரை தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தில் இருந்த நிலையில் இன்று கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது 
 
இன்று நடைபெற்ற பாட்னா மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாட்னா அணி 36 புள்ளிகளும் ஜெய்ப்பூர் அணி 33 புள்ளிகளும் எடுத்ததை அடுத்து மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் பாட்னா அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து கடைசி இடத்தில் இருந்த பாட்னா அணி 9-வது இடத்திற்கு முன்னேறியது. இதனை அடுத்து பதினோராவது இடத்தில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது
 
 
இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் பெங்களூரு மற்றும் பெங்கால் அணிகள் மோதின இந்த போட்டியில் பெங்கால் அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பெங்கால் அணி 42 புள்ளிகளும் பெங்களூர் அணி 40 புள்ளிகளும் பெற்றதால் பெங்கால் அணி வெற்றி பெற்றது


இருப்பினும் புள்ளிகள் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை வழக்கம்போல் டெல்லி, பெங்கால், அரியானா, பெங்களூர், மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments